10 தமிழ் பாடலை படித்து விடையளிக்க தொகுப்பு
அரசினர் உயர்நிலைப்பள்ளி,தணிகைப்போளூர்
10.ஆம் வகுப்பு- தமிழ் முதற்றாள்- பாடலைப்படித்துவிடையளித்தல்
1)
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிததாழ வாழ்த்துவமே.
1)இலக்கணக்குறிப்பு தருக
அன்னை மொழியே, செந்தமிழ், மன்னுஞ்சிலம்பே ,சிலம்பே, செந்தமிழ், முன்னைக்கும்,நறுங்கனி, நறுங்கனியே,கடல்கொண்ட, மன்னி, மண்ணுலகம்,
பேரரசே, வாழ்த்துவம்
2)பிரித்து எழுதுக
நறுங்கனி ,நாட்டிடையில், மண்ணுலகம், நற்கணக்கு-
3) தென்னன் என்பது யாரைக் குறிக்கும்?
4) தென்னன் மகளே எனக் குறிப்பிடப்பட்டது………..
5) பாப்பத்து என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
6)எண்தொகையே என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
7) இப்பாடலில் அடைமொழியோடு குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு யாது?
8) நிலைத்த என்று பொருள் தரும் சொல்லைத் தேர்க.
9)இப்பாடலில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை?
10) ஐம்பெருங்காப்பியங்களில் இப்பாடலில் இடம் பெறாதவை யாவை?
11) வாழ்த்துவம் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
12)வாழ்த்துவம் என்ற வினைப்பகுபதத்தைப் பகுக்கும் முறை……..
13)இப்பாடலை இயற்றியவர் யார்?
14)இப்பாடல் எந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
15)இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச்சொற்களை எழுதுக.
16)இப்பாடலில் வந்துள்ள எதுகைச்சொற்களை எழுதுக.
17)இப்பாடலில் வந்துள்ள இயைபு நயத்தை எடுத்துரைக்க.
2)நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி ,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்,, கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ,ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் ,தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
.
1)பொருள் தருக;
நனந்தலை, தடக்கை, மாஅல், இமிழ், வீ, கொடுஞ் செலவு, தூஉய், விரிச்சி, சுவல், கோவலர், அலமரல், அருங்கடி மூதூர்
-
2)இலக்கணக் குறிப்பு தருக;
நனந்தலை உலகம், வளைஇ, தடக்கை, மாஅல், கொடுஞ் செலவு, பெரும்பெயல், மூதூர் ,கடி மூதூர், அவிழ் அலரி, தூஉய், , கைதொழுது முதுபெண்டிர், அசைத்த கையள், கொடுங்கோல் நன்மொழி, கேட்டனம்
3) பிரித்து எழுதுக;
கொடுஞ்செலவு, பெரும்பெயல்,, மூதூர் கொடுங்கோல், நன்மொழி.
4) இப்பாடல் இடம்பெற்ற நூல் தொகுப்பு யாது?
5) இப்பாடலை இயற்றியவர் யார்?
6) இப்பாடல் இடம் பெற்ற நூலின் மொத்த அடிகள் எத்தனை?
7) இப்பாடல் எந்த பாவகையால் இயற்றப்பட்டது?
8)விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
9)பாடலில் இடம்பெற்ற முல்லைக்குரிய கருப்பொருள்கள் சிலவற்றைஎழுதுக.
10) இன்னே வருகுவர் தாயர்- யார் யாரிடம் கூறியது?
11) நன்னர் நன்மொழி கேட்டனம்- யார் யாரிடம் கூறியது?
12) இப்பாடலில் இடம் பெற்ற எதுகைகளை எடுத்து எழுதுக.
13) இப்பாடலில் இடம் பெற்ற மோனைகளை எடுத்து எழுதுக.
3)விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதால்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
1) இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
2)இப்பாடலை இயற்றியவர் யார்?
3) இப்பாடல் எந்த நகரத்தின் பெருமைகளைக் கூறுகிறது?
4)பொருள் தருக;
திருந்துற நோக்கல், அருகுற, முகமன்
5) பிரித்து எழுதுக;
நன்மொழி, போமெனில், செல்வதாதல், இவ்வொன்பான்
6)இலக்கணக்குறிப்பு தருக;
வியத்தல், நன்மொழி, நோக்கல், எழுதல், செப்பல், பரிந்து, நன்முகமன், ஒழுக்கம்
7) இப்பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப்பெயர்பெயர் யாது?
8) இப்பாடலின் ஆசிரியர் எந்த நகரத்தின் அரசர் ஆவார்?
9)இப்பாடலில் இடம் பெற்ற எதுகைச்சொற்களை எடுத்து எழுதுக.
10) இப்பாடலில் இடம் பெற்ற மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
11) இப்பாடலில் இடம் பெற்ற இயைபுச்சொற்களைப் பட்டியலிடுக.
12)விருந்தோம்பல் எதற்குரிய ஒழுக்கமாகும்?
13) விருந்தினரை எதுவரை பின்தொடர்ந்து செல்லவேண்டும்?
14)இப்பாடல் ஆசிரியரின் பட்டப்பெயர் என்ன?
15)இப்பாடல் நூலின் எந்த பகுதியின் கீழ் இடம்பெற்றுள்ளது?
4)அன்று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனா செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,
நும் இல் போல நில்லாது புக்கு,
கிழவி போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்.
1)இப்பாடல் இடம்பெற்ற நூல் பெயர் யாது?
2)இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ?
3)எந்த விலங்கின் ஓசை இந்த நூலின் பெயர்க்காரணமாக உள்ளது?
4)இப்பாடலை இயற்றியவர் யார்?
5) இப்பாடலின் பாட்டுடைத்தலைவன் யார்?
6)இப்பாடலில் யார் இடத்து, யாரை, யார் ஆற்றுப் படுத்துகிறார்?
7)பொருள்தருக:
அவண்,இணர்,அலங்கு,நரலும்,நோனா,,விறல்,பரு,குரு,அசைஇ,இறடிப்பொம்மல்,கடும்பு,ஆரி,வயிரியம்,அல்கி,படுகர்,வேவை,நோனாச்செரு,கிழவிர்
8)இலக்கணக்குறிப்பு தருக;
அவன்,அல்,அல்கி,ஒள்இணர்,அலைந்து, அலங்கு கழை,நோனாச்செரு,நும்இல்
,நில்லாது,கேளாது,அசைஇ,கெழீஇ,பரூஉக்,குரூஉக்கண்,இறடிப்பொம்மல்.
9)இப்பாடலில் விறல்வேள் என்பது யாரைக் குறித்தது ?
10)பாடலில் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
11)பாடலில் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக .
5) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.
1)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
2 )இப்பாடலின் ஆசிரியர் யார்? அவரது காலம் யாது?
3)இப்பாடல் எந்த தொகுப்பில், எந்த பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளது?
4)இப்பாடல் யார் மீது பாடப்பெற்றது?
5) இப்பாடல் இடம்பெற்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை……
6)ஆசிரியர் தன்னை எவ்வாறு உவமித்துக் கொள்கிறார்?
7) இப்பாடலில் பாட்டுடைத் தலைவனுக்கு கூறப்படும் உவமை யாது?
8)இறைவன் எவ்வாறு உருவகப்படுத்தப் படுகிறார்?
9)வித்துவக்கோடு எனும் ஊர் எங்குள்ளது?
10)பொருள் தருக;
சுடினும், மாளாத,மாயம்
11)பிரித்து எழுதுக;
வித்துவக்கோட்டம்மா,உனதருளே
12)இலக்கணக்குறிப்பு தருக;
அறுத்து, மாளாத,மீளாத்துயர்,வித்துவக்கோட்டம்மா,பார்ப்பன்,நோயாளன்
13)பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
14)பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
15)பாடலில் இயைபுச் சொற்களை எழுதுக.
6)விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும்;பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையி்ற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்…….
1)பொருள் தருக;
விசும்பு,ஊழி ,ஊழ்,தண்பெயல்,ஆர்தருபு,பீடு,ஈண்டி,இருநிலம்.
2)பிரித்து எழுதுக
செந்தீ,தண்பெயல்,
3)இலக்கணக்குறிப்பு தருக
ஊழி,ஊழ் ஊழ்,வளர் வானம்,வாரா,உந்து வளி,செந்தீ,தண்பெயல்,இருநிலம்
4)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
5)இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
6) இப்பாடல் இடம்பெற்ற நூல் பெறும் அடைமொழி யாது?
7)இப்பாடலை இயற்றியவர் யார்?
8) இப்பாடலில் பரமாணு என்று பொருள் தரும் சொல்லைக் கண்டறிக.
9)இப்பாடல் உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
10)உலகின் தோற்றம் குறித்து இந்நூல் குறிப்பிடும் கொள்கை யாது?
11)எந்த வரிசைக் கிரமத்தில் ஐம்பூதங்கள் தோன்றியதாக இந்நூல் குறிப்பிடுகிறது?
12)பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
13)பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
14)பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
7)செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை.
1)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?அது எந்த இலக்கிய வகையினது?
2)இப்பாடலை இயற்றியவர் யார்? அவரது காலம் யாது?
3)சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
4)பிள்ளை வளர்வதில் எந்த மாதத்தைச் செங்கீரை என்கிறோம்?
5)செங்கீரையோடு சேர்த்து பிள்ளைத் தமிழில் எத்தனை பருவங்கள் உள்ளன?
6)இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?
7)குழந்தையின் எந்த உறுப்பு செங்கீரை போன்று அசைந்தாடும்?
8)பொருள் தருக
அடி,குண்டலம்,பண்டி,நுதல்,குழை,மேனி,அசும்பிய,முச்சி
9)பிரித்து எழுதுக
கலந்தாட,திகழரை,சரிந்தாட,நுதற்பொலி,காதுமசைந்தாட
10)இலக்கணக்குறிப்பு தருக
செம்பொன், கிண்கிணி, ஒளிதிகழ் அரை, பைம்பொன், வட்டக் சுட்டி,
ஆடுக, குண்டலமும் குழைகாதும்,சூழியும் உச்சியும்
11) ஆதி வைத்தியநாத புரி என்பது எந்த ஊரைக் குறிக்கும்?
12)இப்பாடலில் குறிப்பிடப்பட்ட அணிகலன்கள் யாவை?
13) பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
14)பாடலில் இடம்பெற்ற மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.
15)பாடலில் இடம்பெற்ற இயைபுச் சொற்களை எழுதுக.
16)முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் பாட்டுடைத்தலைவன் யார்?
விடைகள்:
பாடல் 1: 1)அன்னை மொழியே,சிலம்பே,நறுங்கனியே,பேரரசே-.வி்ளித்தொடர்கள் செந்தமிழ், நறுங்கனி-பண்புத்தொகை.மன்னி-வினையெச்சம்.மன்னுஞ்சிலம்பே பெயரெச்சம்.கடல்கொண்டஇரண்டாம்வேற்றுமைத்தொகை.வாழ்த்துவம்- தன்மைப்பன்மைவினைமுற்று.2)நறுமை+கனி,நாடு+இடையில்,மண்+உலகம்,நல்+கணக்கு3)பாண்டியன் 4)தமிழ் 5)பத்துப்பாட்டு 6)எட்டுத்தொகை7)நற்கணக்கு-பதினெண் கீழ்க்கணக்கு 8)மன்னும் 9)சிலப்பதிகாரம்,மணிமேகலை, 10)சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி11)மூன்றாம்வேற்றுமைத்தொடர்.12)வாழ்த்து+வ்+அம் 13)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 14)கனிச்சாறு.
பாடல்2:1)அகன்ற,பெரியகை,திருமால்,ஒலிக்கும்,அரும்பு,விரைவாகச் செல்லுதல்,தூவி,நற்சொல்,தோள்,இடையர்,துன்பம்,காவலை உடைய ஊர் 2)குறிப்புப்பெயரெச்சம்,சொல்லிசையளபெடை,உரிச்சொற்றொடர், செய்யுளிசையளபெடை,பண்புத்தொகை,பண்புத்தொகை,பண்புத்தொகை,உரிச்சொற்றொடர்,வினைத்தொகை,சொல்லிசையளபெடை,மூன்றாம்வேற்றுமைதொகை,,பண்புத்தொகை,பெயரெச்சம்,பண்புத்தொகை,பண்புத்தொகை,தன்மைப்பன்மை வினைமுற்று. 3)கொடுமை+செலவு,பெருமை+பெயல்,
முதுமை+ஊர்,கொடுமை+கோல்,நன்மை+மொழி.4)பத்துப்பாட்டு 5)நப்பூதனார் 6)103 7)ஆசிரியப்பா 8)நற்சொல்கேட்டல் 9)பூ-முல்லை,
தெய்வம்:திருமால்10)ஆய்மகள்,கன்றிடம்11)முதுபெண்டிர்,தலைவியிடம்
பாடல்3 : 1)காசிக்காண்டம்2)அதிவீரராமபாண்டியன்3)காசி4)முகமல்ர்ச்சி
அருகில்,விருந்தோம்பல் சொற்கள்.5)நன்மை+மொழி,போம்+எனில்,
இ+ஒன்பான் 6)வியத்தல்,நோக்கல்,எழுதல்,செப்பல்-தொழிற்பெயர்,
நன்மொழி,நன்முகமன்-பண்புத்தொகை,பரிந்து-வினையெச்சம்.7)ஒன்பது.
8)கொற்கை 12)இல்லறம் 13)வாசல் 14)இல்லொழுக்கங்கூறிய
பாடல் 4: 1)மலைபடுகடாம் 2) பத்துப்பாட்டு 3)கடாம் (யானை) 4)பெருங்கௌசிகனார் 5)நன்னன் 6) நன்னனிடம்,பரிசில் பெறச் செல்லும் கூத்தனை, பரிசில் பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்துகிறார்.7)பகல், ஒளிரும்,
அசையும், ஒலிக்கும், பொறுக்கமுடியாத, வெற்றி, மாமிசம், நிறமுடைய,
இளைப்பாறி,தினைச்சோறு,சுற்றம்,அருமை,கூத்தர்,தங்கி,பள்ளம்,வெந்தது,உறவினர்8)காலப்பெயர்,காலப்பெயர்,வினையெச்சம்,வினையெச்சம்,
வினைத்தொகை,ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம், ஆறாம் வேற்றுமைத்தொகை, எதிர்மறை பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்
,சொல்லிசை அளபெடை,சொல்லிசை அளபெடை,செய்யுளிசைஅளபெடை
,செய்யுளிசை அளபெடை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
9) நன்னனை
பாடல் 5: 1)பெருமாள் திருமொழி 2) குலசேகரஆழ்வார்,8.ஆம் நூற்றாண்டு
3)நாலாயிரத்திவ்ய பிரபந்தம், முதலாயிரம் 4)திருவித்துவக்கோடு, உய்யவந்த பெருமாளின் மீது 5)105 6) நோயாளன் 7)மருத்துவன் 8) அன்னை 9)கேரள மாநிலத்தில் பாலக்கோடு மாவட்டத்தில் 10) சுட்டாலும், தீராத, விளையாட்டு.11)வித்துவம்+கோடு+அம்மா,உனது+அருளே,12)வினையெச்ச,எதிர்மறைப் பெயரெச்சம்,ஈறுகெட்டஎதிர்மறைபெயரெச்சம்,விளித்தொடர், தன்மை ஒருமை வினைமுற்று, வினையாலணையும் பெயர்.
பாடல் 6: 1)வானம், யுகம், முறை, குளிர்ந்த மழை, வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த,சிறப்பு,பெரியஉலகம்,2)செம்மை+தீ,தண்மை+பெயல்3)காலப்பெயர்,அடுக்குதொடர்,வினைத்தொகை,ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம,வினைத்தொகை,
பண்புத்தொகை,பண்புத்தொகை,உரிச்சொல்தொடர்4)பரிபாடல்5)எட்டுத்தொகை
6)ஓங்கு7)கீரந்தையார்8)கரு9)புவியின்உருவாக்கம்10)பெருவெடிப்புக்கொள்கை11)காற்று,வானம், நெருப்பு, புவி,நீர்
பாடல் 7: 1)முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ்,சிற்றிலக்கியம்2)குமரகுருபரர்,கி.பி.17
3)96 4)5-6மாதம்5)பத்து6)காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை ,அம்புலி7)தலை8)பாதம்,காதணி,வயிறு,காதணி,உடல்,ஒளி வீசுகின்ற, தலையுச்சி்க்கொண்டை9)கலந்து+ ஆட, திகழ்+ அரை,சரிந்து+ ஆட, நுதல்+ போலி, காதும்+ அசைந்து+ ஆட 10)செம்பொன், பைம்பொன், வட்டச்சுட்டி-பண்புத்தொகை,கிண்கிணி-இரட்டைக்கிளவி ஒளிதிகழ்அரை-வினைத்தொகை ,ஆடுக- வியங்கோள் வினைமுற்றுகுண்டலமும் குழைகாதும் ,சூழியும் உச்சியும்- எண்ணும்மைகள் 11)நாகை மாவட்டம்-வைத்தீஸ்வரன் கோவில் 12)சிலம்பு, கிண்கிணி, அரைநாண், சுட்டி,குண்டலம்,குழை, சூழி 16)முருகப்பெருமான் மீது(வைத்தீஸ்வரன் கோவில்)
.
ஆக்கம்: வெ.க.வாசு,
தமிழாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
தணிகைபோளூர்(வே.மா)
அலைபேசி:9659838387
10.ஆம் வகுப்பு- தமிழ் முதற்றாள்- பாடலைப்படித்துவிடையளித்தல்
1)
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிததாழ வாழ்த்துவமே.
1)இலக்கணக்குறிப்பு தருக
அன்னை மொழியே, செந்தமிழ், மன்னுஞ்சிலம்பே ,சிலம்பே, செந்தமிழ், முன்னைக்கும்,நறுங்கனி, நறுங்கனியே,கடல்கொண்ட, மன்னி, மண்ணுலகம்,
பேரரசே, வாழ்த்துவம்
2)பிரித்து எழுதுக
நறுங்கனி ,நாட்டிடையில், மண்ணுலகம், நற்கணக்கு-
3) தென்னன் என்பது யாரைக் குறிக்கும்?
4) தென்னன் மகளே எனக் குறிப்பிடப்பட்டது………..
5) பாப்பத்து என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
6)எண்தொகையே என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
7) இப்பாடலில் அடைமொழியோடு குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு யாது?
8) நிலைத்த என்று பொருள் தரும் சொல்லைத் தேர்க.
9)இப்பாடலில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை?
10) ஐம்பெருங்காப்பியங்களில் இப்பாடலில் இடம் பெறாதவை யாவை?
11) வாழ்த்துவம் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
12)வாழ்த்துவம் என்ற வினைப்பகுபதத்தைப் பகுக்கும் முறை……..
13)இப்பாடலை இயற்றியவர் யார்?
14)இப்பாடல் எந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
15)இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச்சொற்களை எழுதுக.
16)இப்பாடலில் வந்துள்ள எதுகைச்சொற்களை எழுதுக.
17)இப்பாடலில் வந்துள்ள இயைபு நயத்தை எடுத்துரைக்க.
2)நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி ,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்,, கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ,ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் ,தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
.
1)பொருள் தருக;
நனந்தலை, தடக்கை, மாஅல், இமிழ், வீ, கொடுஞ் செலவு, தூஉய், விரிச்சி, சுவல், கோவலர், அலமரல், அருங்கடி மூதூர்
-
2)இலக்கணக் குறிப்பு தருக;
நனந்தலை உலகம், வளைஇ, தடக்கை, மாஅல், கொடுஞ் செலவு, பெரும்பெயல், மூதூர் ,கடி மூதூர், அவிழ் அலரி, தூஉய், , கைதொழுது முதுபெண்டிர், அசைத்த கையள், கொடுங்கோல் நன்மொழி, கேட்டனம்
3) பிரித்து எழுதுக;
கொடுஞ்செலவு, பெரும்பெயல்,, மூதூர் கொடுங்கோல், நன்மொழி.
4) இப்பாடல் இடம்பெற்ற நூல் தொகுப்பு யாது?
5) இப்பாடலை இயற்றியவர் யார்?
6) இப்பாடல் இடம் பெற்ற நூலின் மொத்த அடிகள் எத்தனை?
7) இப்பாடல் எந்த பாவகையால் இயற்றப்பட்டது?
8)விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
9)பாடலில் இடம்பெற்ற முல்லைக்குரிய கருப்பொருள்கள் சிலவற்றைஎழுதுக.
10) இன்னே வருகுவர் தாயர்- யார் யாரிடம் கூறியது?
11) நன்னர் நன்மொழி கேட்டனம்- யார் யாரிடம் கூறியது?
12) இப்பாடலில் இடம் பெற்ற எதுகைகளை எடுத்து எழுதுக.
13) இப்பாடலில் இடம் பெற்ற மோனைகளை எடுத்து எழுதுக.
3)விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதால்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
1) இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
2)இப்பாடலை இயற்றியவர் யார்?
3) இப்பாடல் எந்த நகரத்தின் பெருமைகளைக் கூறுகிறது?
4)பொருள் தருக;
திருந்துற நோக்கல், அருகுற, முகமன்
5) பிரித்து எழுதுக;
நன்மொழி, போமெனில், செல்வதாதல், இவ்வொன்பான்
6)இலக்கணக்குறிப்பு தருக;
வியத்தல், நன்மொழி, நோக்கல், எழுதல், செப்பல், பரிந்து, நன்முகமன், ஒழுக்கம்
7) இப்பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப்பெயர்பெயர் யாது?
8) இப்பாடலின் ஆசிரியர் எந்த நகரத்தின் அரசர் ஆவார்?
9)இப்பாடலில் இடம் பெற்ற எதுகைச்சொற்களை எடுத்து எழுதுக.
10) இப்பாடலில் இடம் பெற்ற மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
11) இப்பாடலில் இடம் பெற்ற இயைபுச்சொற்களைப் பட்டியலிடுக.
12)விருந்தோம்பல் எதற்குரிய ஒழுக்கமாகும்?
13) விருந்தினரை எதுவரை பின்தொடர்ந்து செல்லவேண்டும்?
14)இப்பாடல் ஆசிரியரின் பட்டப்பெயர் என்ன?
15)இப்பாடல் நூலின் எந்த பகுதியின் கீழ் இடம்பெற்றுள்ளது?
4)அன்று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனா செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,
நும் இல் போல நில்லாது புக்கு,
கிழவி போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்.
1)இப்பாடல் இடம்பெற்ற நூல் பெயர் யாது?
2)இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ?
3)எந்த விலங்கின் ஓசை இந்த நூலின் பெயர்க்காரணமாக உள்ளது?
4)இப்பாடலை இயற்றியவர் யார்?
5) இப்பாடலின் பாட்டுடைத்தலைவன் யார்?
6)இப்பாடலில் யார் இடத்து, யாரை, யார் ஆற்றுப் படுத்துகிறார்?
7)பொருள்தருக:
அவண்,இணர்,அலங்கு,நரலும்,நோனா,,விறல்,பரு,குரு,அசைஇ,இறடிப்பொம்மல்,கடும்பு,ஆரி,வயிரியம்,அல்கி,படுகர்,வேவை,நோனாச்செரு,கிழவிர்
8)இலக்கணக்குறிப்பு தருக;
அவன்,அல்,அல்கி,ஒள்இணர்,அலைந்து, அலங்கு கழை,நோனாச்செரு,நும்இல்
,நில்லாது,கேளாது,அசைஇ,கெழீஇ,பரூஉக்,குரூஉக்கண்,இறடிப்பொம்மல்.
9)இப்பாடலில் விறல்வேள் என்பது யாரைக் குறித்தது ?
10)பாடலில் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
11)பாடலில் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக .
5) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.
1)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
2 )இப்பாடலின் ஆசிரியர் யார்? அவரது காலம் யாது?
3)இப்பாடல் எந்த தொகுப்பில், எந்த பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளது?
4)இப்பாடல் யார் மீது பாடப்பெற்றது?
5) இப்பாடல் இடம்பெற்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை……
6)ஆசிரியர் தன்னை எவ்வாறு உவமித்துக் கொள்கிறார்?
7) இப்பாடலில் பாட்டுடைத் தலைவனுக்கு கூறப்படும் உவமை யாது?
8)இறைவன் எவ்வாறு உருவகப்படுத்தப் படுகிறார்?
9)வித்துவக்கோடு எனும் ஊர் எங்குள்ளது?
10)பொருள் தருக;
சுடினும், மாளாத,மாயம்
11)பிரித்து எழுதுக;
வித்துவக்கோட்டம்மா,உனதருளே
12)இலக்கணக்குறிப்பு தருக;
அறுத்து, மாளாத,மீளாத்துயர்,வித்துவக்கோட்டம்மா,பார்ப்பன்,நோயாளன்
13)பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
14)பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
15)பாடலில் இயைபுச் சொற்களை எழுதுக.
6)விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும்;பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையி்ற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்…….
1)பொருள் தருக;
விசும்பு,ஊழி ,ஊழ்,தண்பெயல்,ஆர்தருபு,பீடு,ஈண்டி,இருநிலம்.
2)பிரித்து எழுதுக
செந்தீ,தண்பெயல்,
3)இலக்கணக்குறிப்பு தருக
ஊழி,ஊழ் ஊழ்,வளர் வானம்,வாரா,உந்து வளி,செந்தீ,தண்பெயல்,இருநிலம்
4)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?
5)இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
6) இப்பாடல் இடம்பெற்ற நூல் பெறும் அடைமொழி யாது?
7)இப்பாடலை இயற்றியவர் யார்?
8) இப்பாடலில் பரமாணு என்று பொருள் தரும் சொல்லைக் கண்டறிக.
9)இப்பாடல் உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
10)உலகின் தோற்றம் குறித்து இந்நூல் குறிப்பிடும் கொள்கை யாது?
11)எந்த வரிசைக் கிரமத்தில் ஐம்பூதங்கள் தோன்றியதாக இந்நூல் குறிப்பிடுகிறது?
12)பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
13)பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
14)பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
7)செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை.
1)இப்பாடல் இடம் பெற்ற நூல் யாது?அது எந்த இலக்கிய வகையினது?
2)இப்பாடலை இயற்றியவர் யார்? அவரது காலம் யாது?
3)சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
4)பிள்ளை வளர்வதில் எந்த மாதத்தைச் செங்கீரை என்கிறோம்?
5)செங்கீரையோடு சேர்த்து பிள்ளைத் தமிழில் எத்தனை பருவங்கள் உள்ளன?
6)இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?
7)குழந்தையின் எந்த உறுப்பு செங்கீரை போன்று அசைந்தாடும்?
8)பொருள் தருக
அடி,குண்டலம்,பண்டி,நுதல்,குழை,மேனி,அசும்பிய,முச்சி
9)பிரித்து எழுதுக
கலந்தாட,திகழரை,சரிந்தாட,நுதற்பொலி,காதுமசைந்தாட
10)இலக்கணக்குறிப்பு தருக
செம்பொன், கிண்கிணி, ஒளிதிகழ் அரை, பைம்பொன், வட்டக் சுட்டி,
ஆடுக, குண்டலமும் குழைகாதும்,சூழியும் உச்சியும்
11) ஆதி வைத்தியநாத புரி என்பது எந்த ஊரைக் குறிக்கும்?
12)இப்பாடலில் குறிப்பிடப்பட்ட அணிகலன்கள் யாவை?
13) பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
14)பாடலில் இடம்பெற்ற மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.
15)பாடலில் இடம்பெற்ற இயைபுச் சொற்களை எழுதுக.
16)முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் பாட்டுடைத்தலைவன் யார்?
விடைகள்:
பாடல் 1: 1)அன்னை மொழியே,சிலம்பே,நறுங்கனியே,பேரரசே-.வி்ளித்தொடர்கள் செந்தமிழ், நறுங்கனி-பண்புத்தொகை.மன்னி-வினையெச்சம்.மன்னுஞ்சிலம்பே பெயரெச்சம்.கடல்கொண்டஇரண்டாம்வேற்றுமைத்தொகை.வாழ்த்துவம்- தன்மைப்பன்மைவினைமுற்று.2)நறுமை+கனி,நாடு+இடையில்,மண்+உலகம்,நல்+கணக்கு3)பாண்டியன் 4)தமிழ் 5)பத்துப்பாட்டு 6)எட்டுத்தொகை7)நற்கணக்கு-பதினெண் கீழ்க்கணக்கு 8)மன்னும் 9)சிலப்பதிகாரம்,மணிமேகலை, 10)சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி11)மூன்றாம்வேற்றுமைத்தொடர்.12)வாழ்த்து+வ்+அம் 13)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 14)கனிச்சாறு.
பாடல்2:1)அகன்ற,பெரியகை,திருமால்,ஒலிக்கும்,அரும்பு,விரைவாகச் செல்லுதல்,தூவி,நற்சொல்,தோள்,இடையர்,துன்பம்,காவலை உடைய ஊர் 2)குறிப்புப்பெயரெச்சம்,சொல்லிசையளபெடை,உரிச்சொற்றொடர், செய்யுளிசையளபெடை,பண்புத்தொகை,பண்புத்தொகை,பண்புத்தொகை,உரிச்சொற்றொடர்,வினைத்தொகை,சொல்லிசையளபெடை,மூன்றாம்வேற்றுமைதொகை,,பண்புத்தொகை,பெயரெச்சம்,பண்புத்தொகை,பண்புத்தொகை,தன்மைப்பன்மை வினைமுற்று. 3)கொடுமை+செலவு,பெருமை+பெயல்,
முதுமை+ஊர்,கொடுமை+கோல்,நன்மை+மொழி.4)பத்துப்பாட்டு 5)நப்பூதனார் 6)103 7)ஆசிரியப்பா 8)நற்சொல்கேட்டல் 9)பூ-முல்லை,
தெய்வம்:திருமால்10)ஆய்மகள்,கன்றிடம்11)முதுபெண்டிர்,தலைவியிடம்
பாடல்3 : 1)காசிக்காண்டம்2)அதிவீரராமபாண்டியன்3)காசி4)முகமல்ர்ச்சி
அருகில்,விருந்தோம்பல் சொற்கள்.5)நன்மை+மொழி,போம்+எனில்,
இ+ஒன்பான் 6)வியத்தல்,நோக்கல்,எழுதல்,செப்பல்-தொழிற்பெயர்,
நன்மொழி,நன்முகமன்-பண்புத்தொகை,பரிந்து-வினையெச்சம்.7)ஒன்பது.
8)கொற்கை 12)இல்லறம் 13)வாசல் 14)இல்லொழுக்கங்கூறிய
பாடல் 4: 1)மலைபடுகடாம் 2) பத்துப்பாட்டு 3)கடாம் (யானை) 4)பெருங்கௌசிகனார் 5)நன்னன் 6) நன்னனிடம்,பரிசில் பெறச் செல்லும் கூத்தனை, பரிசில் பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்துகிறார்.7)பகல், ஒளிரும்,
அசையும், ஒலிக்கும், பொறுக்கமுடியாத, வெற்றி, மாமிசம், நிறமுடைய,
இளைப்பாறி,தினைச்சோறு,சுற்றம்,அருமை,கூத்தர்,தங்கி,பள்ளம்,வெந்தது,உறவினர்8)காலப்பெயர்,காலப்பெயர்,வினையெச்சம்,வினையெச்சம்,
வினைத்தொகை,ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம், ஆறாம் வேற்றுமைத்தொகை, எதிர்மறை பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்
,சொல்லிசை அளபெடை,சொல்லிசை அளபெடை,செய்யுளிசைஅளபெடை
,செய்யுளிசை அளபெடை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
9) நன்னனை
பாடல் 5: 1)பெருமாள் திருமொழி 2) குலசேகரஆழ்வார்,8.ஆம் நூற்றாண்டு
3)நாலாயிரத்திவ்ய பிரபந்தம், முதலாயிரம் 4)திருவித்துவக்கோடு, உய்யவந்த பெருமாளின் மீது 5)105 6) நோயாளன் 7)மருத்துவன் 8) அன்னை 9)கேரள மாநிலத்தில் பாலக்கோடு மாவட்டத்தில் 10) சுட்டாலும், தீராத, விளையாட்டு.11)வித்துவம்+கோடு+அம்மா,உனது+அருளே,12)வினையெச்ச,எதிர்மறைப் பெயரெச்சம்,ஈறுகெட்டஎதிர்மறைபெயரெச்சம்,விளித்தொடர், தன்மை ஒருமை வினைமுற்று, வினையாலணையும் பெயர்.
பாடல் 6: 1)வானம், யுகம், முறை, குளிர்ந்த மழை, வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த,சிறப்பு,பெரியஉலகம்,2)செம்மை+தீ,தண்மை+பெயல்3)காலப்பெயர்,அடுக்குதொடர்,வினைத்தொகை,ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம,வினைத்தொகை,
பண்புத்தொகை,பண்புத்தொகை,உரிச்சொல்தொடர்4)பரிபாடல்5)எட்டுத்தொகை
6)ஓங்கு7)கீரந்தையார்8)கரு9)புவியின்உருவாக்கம்10)பெருவெடிப்புக்கொள்கை11)காற்று,வானம், நெருப்பு, புவி,நீர்
பாடல் 7: 1)முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ்,சிற்றிலக்கியம்2)குமரகுருபரர்,கி.பி.17
3)96 4)5-6மாதம்5)பத்து6)காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை ,அம்புலி7)தலை8)பாதம்,காதணி,வயிறு,காதணி,உடல்,ஒளி வீசுகின்ற, தலையுச்சி்க்கொண்டை9)கலந்து+ ஆட, திகழ்+ அரை,சரிந்து+ ஆட, நுதல்+ போலி, காதும்+ அசைந்து+ ஆட 10)செம்பொன், பைம்பொன், வட்டச்சுட்டி-பண்புத்தொகை,கிண்கிணி-இரட்டைக்கிளவி ஒளிதிகழ்அரை-வினைத்தொகை ,ஆடுக- வியங்கோள் வினைமுற்றுகுண்டலமும் குழைகாதும் ,சூழியும் உச்சியும்- எண்ணும்மைகள் 11)நாகை மாவட்டம்-வைத்தீஸ்வரன் கோவில் 12)சிலம்பு, கிண்கிணி, அரைநாண், சுட்டி,குண்டலம்,குழை, சூழி 16)முருகப்பெருமான் மீது(வைத்தீஸ்வரன் கோவில்)
.
ஆக்கம்: வெ.க.வாசு,
தமிழாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
தணிகைபோளூர்(வே.மா)
அலைபேசி:9659838387
Comments
Post a Comment